சாம்சங் தொழிலாளர் பிரச்சினை தீர்வு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த திருமா | VCK

Update: 2024-10-26 15:13 GMT

சாம்சங் தொழிலாளர் பிரச்சினையில் இணக்கமான தீர்வு கண்டதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், விசிக தலைவர் திருமாவளவன், சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ., சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் இருந்தனர். பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு உடன் இருந்தார். இந்த சந்திப்பின்போது, சாம்சங் தொழிற்சங்கம் தொடர்பாக நீதிமன்றத்தில் உள்ள வழக்கை தீவிரப்படுத்தி, நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்