``ஆபத்தான முயற்சி... வேண்டாம்... கைவிடுங்கள்..'' அன்புமணி காட்டம்

Update: 2024-10-22 11:13 GMT

தீப ஒளித் திருநாளுக்கு, தனியார் பேருந்துகளை

வாடகைக்கு எடுத்து இயக்குவது தனியார்மயமே

என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக கிலோமீட்டருக்கு 51 ரூபாய் 25 காசுகள் வீதம் வாடகை வழங்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியிருப்பது ஆபத்தான முயற்சி என்றும், இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 8 ஆயிரத்து182 புதிய பேருந்துகளை வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டதாகவும், ஆனால், மூன்றரை ஆண்டுகளில் 1088 புதிய பேருந்துகள் மட்டுமே வாங்கப்பட்டதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்