திக்..திக்.. செந்தில்பாலாஜி.. ஒட்டுமொத்த அரசியல் களமே காத்திருக்கும் தீர்ப்பு இன்று

Update: 2024-09-26 03:31 GMT

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று கூறுகிறது. தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்தது. அவரது ஜாமீன் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். விசாரணையை முடித்த உச்சநீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது. இதன் தொடர்ச்சியாக இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்