"என் உயிர் உங்கள் காலடியில்.." - செந்தில் பாலாஜி போட்ட `X' பதிவு

Update: 2024-09-28 01:59 GMT

சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, காலில் விழுந்து வணங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, எக்ஸ் தளத்தில் உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், 471 நாட்கள் தனிமையின் இருள் நீங்கி சூரியனின் காலடியில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு நாளும், நிமிடமும், நொடியும் உங்களையே நினைத்திருந்தேன் தலைவரே என்றும் குறிப்பிட்டுள்ளார். தாயுமானவராய் தாங்கினீர்கள், என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம் என்றும், உங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் வாழ்நாள் முழுக்க நன்றிக் கடன்பட்டிருக்கிறேன் என்றும் அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்