#BREAKING || கைமீறிய SP வருண் குமார் விவகாரம்.. சீமானுக்கே தெரியாமல் கட்சிக்குள் நடந்த பகீர்

Update: 2024-08-21 03:59 GMT

சீமான் விளக்க கடித விவகாரத்தில், நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம். திருச்சி எஸ்.பி. வருண்குமாருக்கு, சீமான் தொடர்பாக தன்னிச்சையாக விளக்கக் கடிதம் கொடுத்ததாக நடவடிக்கை. வழக்கறிஞர் பாசறை மாநிலச் செயலாளர் சேவியர் ஃபெலிக்ஸை கட்சியில் இருந்து நீக்கி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உத்தரவு. தன்னைப் பற்றி அவதூறாக பேசியதற்கு விளக்கம் கேட்டு, திருச்சி எஸ்.பி. வருண்குமார், சீமானுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். உரிய விளக்கம் இல்லாவிட்டால் ரூ.2 கோடி மான நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்வேன் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. சாட்டை துரைமுருகனிடம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதையே உண்மை என நம்பி சீமான் பேசியதாக வழக்கறிஞர் விளக்கம் அளித்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்