"கிடைக்காவிட்டால் வீதியில் இறங்கி போராடுவேன..!" அனல் பறக்க பேசிய ராகுல்

Update: 2024-09-25 17:01 GMT

ஜம்முவில் தேர்தல் பிரசாரம் செய்த காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, நாட்டில் அனைத்து ஒப்பந்தங்களும் அதானிக்கே வழங்கப்படுகிறது என குற்றம் சாட்டினார்.

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கிடைக்க வீதியில் இறங்கி போராடுவோம் என ராகுல் காதி தெரிவித்தார். நாட்டில் அனைத்து ஒப்பந்தங்களும் அதானிக்கே வழங்கப்படுகிறது என்றும் இது மேக் இன் இந்தியா திட்டமல்ல, மேக் கின் அதானி திட்டம் என்றும் ராகுல் காந்தி விமர்சித்தார். மோடி ஆட்சி அதானி, அம்பானி போன்ற பெரும் முதலாளிகளுக்காக பணியாற்றுவதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையை தாக்குவதற்கான ஆயுதம்தான் ஜிஎஸ்டி என்றும் விமர்சித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்