முறைப்படி இருக்கையில் அமர்ந்து கையெழுத்து போட்டு பணியை தொடங்கிய அமைச்சர்கள்

Update: 2024-06-11 09:17 GMT

மத்திய அமைச்சர்கள், தங்களது அலுவலகங்களில் முறைப்படி இருக்கையில் அமர்ந்து பொறுப்பேற்றுக் கொண்டனர். அதன் உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராக அமித்ஷா பொறுப்பெற்றுக் கொண்டார். தனது அலுவலகத்தில் இருக்கையில் அமர்ந்து கோப்பில் கையெழுத்திட்டு பணியை தொடங்கினார்.

சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்ட பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தனது அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்கிரண் ரிஜிஜூ, தனது அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சராக முறைப்படி பொறுப்பேற்றார்.

ரயில்வே மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சராக அஸ்விணி வைஷ்ணவ் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்