"எல்லாம் அரசியலுக்காக தான்".. அமைச்சர் பொன்முடி பரபர பேச்சு

Update: 2024-09-12 17:33 GMT

மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு நிதியை நிறுத்தி, அரசியல் செய்வதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். அரசு கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் பதிவாளர்கள், கல்லூரி முதல்வர்கள், மண்டல இணை இயக்குனர்கள் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் 15 ஆயிரம் மாணவர்கள், கடந்தாண்டினை காட்டிலும் கூடுதலாக சேர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்