"விடுபட்ட மகளிருக்கு விரைவில் மகளிர் உரிமைத்தொகை" - எம்.பி.கனிமொழி வாக்குறுதி

Update: 2024-10-03 04:42 GMT

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் கீதா ஜீவன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய இருவரும், மத்திய அரசிடம் இருந்து நிதி வந்ததும் மீண்டும் 100 நாள் வேலைத் திட்டம் கிராமப்புற மக்களுக்கு வழங்கப்படும் என்றும், விடுபட்ட தகுதியுள்ள மகளிருக்கு விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்