பாஜக நிர்வாகியின் பிறந்தநாள் கொண்டாட்டம்! பிரபல ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்.. சென்னையில் அதிர்ச்சி

Update: 2024-06-29 11:25 GMT

பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளரான அலெக்ஸில் சுதாகர், செங்கல்பட்டு அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தனது பிறந்த நாளை தடபுடலாக கொண்டாடி இருக்கிறார். இதில் பிரபல ரவுடியான சீர்காழி சத்யா கலந்து கொண்ட நிலையில், கொண்டாட்டம் முடிந்து சென்னை திரும்பிய அவர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஒடியதும், அவரை போலீசார் துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிடிபட்ட சீர்காழீ சத்யா மீது 5 கொலை உள்ளிட்ட 36க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விசாரணையில், ரவுடி சீர்காழி சத்யாவுக்கு, பாஜக நிர்வாகி அலெக்ஸிஸ் சுதாகர் துப்பாக்கி வாங்கி கொடுத்ததும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அலெக்ஸிஸ் சுதாகரை கைது செய்த போலீசார், அவரை சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக கைது செய்யப்பட்ட அலெக்ஸிஸ் சுதாகரை திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது

Tags:    

மேலும் செய்திகள்