பகீர் கிளப்பிய ஈபிஎஸ்... கோவை போலீஸ் சொன்ன தகவல்

Update: 2024-10-10 07:32 GMT

அ.தி.மு.க பிரமுகர் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஈபிஎஸ்ஸின் கருத்தை கோவை மாநகர காவல்துறை மறுத்துள்ளது.

கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், குனியமுத்தூர் பகுதியில் நடைபெற்ற சம்பவம் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. அ.தி.மு.க பிரமுகர் ராஜாவிற்கும்- கோபிநாத்திற்கும் இடையில் இருந்த காழ்ப்புணர்ச்சியால் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுவது போல் கஞ்சா, போதை மற்றும் அரசியல் நோக்கங்கள் எதுவும் இல்லை எனவும் கோவை மாநகர காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்