தேதி குறித்து ஈபிஎஸ் அதிரடி அறிவிப்பு | ADMK

Update: 2024-10-02 11:40 GMT

திமுக அரசை கண்டித்தும், சொத்துவரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் மனிதச்சங்கில் போராட்டம் நடைபெறும் என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், அக்டோபர் 8-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு, தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அதிமுகவின் போராட்டத்தில் கலந்து கொள்ள விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்களுக்கும் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்