"இலங்கை அரசுக்கு நிதியுதவி அளிக்க முடிவு" - பிரதமர் மோடி திட்டவட்டம்

இலங்கையில் மீண்டும் குடியேற நினைக்கும் தமிழர்களுக்காக கூடுதலாக 14 ஆயிரம் வீடுகள் கட்ட நிதி உதவி அளிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-29 11:00 GMT
இலங்கையில் மீண்டும் குடியேற நினைக்கும் தமிழர்களுக்காக, கூடுதலாக 14 ஆயிரம் வீடுகள் கட்ட நிதி உதவி அளிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ உடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு திட்டங்களுக்காக இலங்கைக்கு 400 மில்லியன் டாலர்கள் கடனாக வழங்கப்படும் என தெரிவித்தார். இது தவிர சூரிய மின்னுற்பத்தி திட்டங்களுக்காக 100 மில்லியன் டாலர்கள் கடனாக வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்