"கண்துடைப்பு நாடகம் நடத்துவது யார்?" - வைகோவுக்கு கடம்பூர் ராஜூ பதில்
தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்றார்.
தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, மேகதாது விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியது பற்றி கண்துடைப்பு நாடகம் என விமர்சித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு பதிலளித்தார். திமுகவை கடுமையாக விமர்சித்த வைகோ, தற்போது ஸ்டாலினின் புகழ்பாடி அவரை முதலமைச்சர் ஆக்குவேன் என சொல்வதன் மூலம் மக்களுக்கு யார் கண்துடைப்பு நாடகம் நடத்துகின்றனர் என்பது தெரியும் என அவர் தெரிவித்தார்.