மின்கசிவால் பற்றி எரிந்த தீ.. நூலிழையில் தப்பிய மக்கள் | Uttar Pradesh | Fire Accident | Thanthitv
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், அங்கிருந்த மக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.