"இதில் கலந்து கொண்டால் மறு ஜென்மம் இருக்காது.." திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்

Update: 2024-10-11 06:22 GMT

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாளான இன்று, தேரோட்டம் நடைபெற்றது. மகாரதம் என்று அழைக்கப்படும் இந்த தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேரில் எழுந்தருளிய மலையப்ப சுவாமிகள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டால் மறு ஜென்மம் இருக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த நிகழ்வின்போது பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்