கோயில் நிலத்தை கூறுபோட்ட கும்பல்... கூண்டுக்குள் போட்ட காவல்துறை

Update: 2024-09-07 10:22 GMT

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கோயில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரைக்கால் கோவில்பத்து கிராமத்தில் உள்ள பார்வதிஸ்வரர் சுவாமி தேவஸ்தானத்திற்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களை மோசடி கும்பல், போலி ஆவணங்கள் மூலம் பொது மக்களுக்கு விற்பனை செய்தது அம்பலமானது. இடைத்தரகராக செயல்பட்ட சிவராமன் என்பவரை போலீசார் கைது நிலையில், 10க்கும் மேற்பட்ட மனைகள் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. மோசடியில் பலருக்கு தொடர்பு உள்ளதாக கருதப்படும் நிலையில், தலைமறைவாக உள்ள ஆனந்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்