ஹோட்டலில் மதுபானம் கொடுத்து சீரழித்த இயக்குனர் - விஸ்வரூபம் எடுக்கும் பாலியல் விவகாரம்

Update: 2024-08-31 11:04 GMT

கேரளாவில் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்த நடிகைகளிடம் இருந்து ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்குமூலத்தின் நகல் கிடைத்தவுடன், போலீசார் கைது நடவடிக்கையை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலியல் புகார்களில் சிக்கியவர்களில் நடிகர் முகேஷ், காங்கிரஸ் வழக்கறிஞர்கள் பிரிவு மாநில தலைவர் சந்திரசேகரன் ஆகியோரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், நடிகர் ஜெயசூர்யா, அம்மா அமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் நடிகர் எடவேல பாபு, மணியன்பிள்ளை ராஜூ உள்ளிட்டோரை கைது செய்ய இதுவரை தடையில்லை என கூறப்படுகிறது. இதனிடையே, கேரள திரைப்பட அகாடமி தலைவரான இயக்குநர் ரஞ்சித் மீது இ-மெயில் மூலம் புகார் அளித்த வங்காள நடிகை ஸ்ரீலேகா மித்ரா, விசாரணைக்கு ஒத்துழைக்காததால் அவரிடமிருந்து ரகசிய வாக்குமூலம் பெற முடியாமல் போலீசார் தவித்து வருவதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்