சாலையில் உயிருக்கு போராடியவரிடம் கூட பையை துழாவிய இரக்கமற்றவன் - கடைசியில் நடந்த உடல் தானம்

Update: 2024-06-27 08:46 GMT

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் முப்புடாதி அம்மன் கோயில் தெற்கு தெருவில் வசிக்கும் கல்யாணசுந்தரம் மதுரை தென்சாசி தேசிய நெடுஞ்சாலை அட்டைக்குளம் அருகே நடந்து சென்ற போது பின்னால் வந்த ஆட்டோ மோதி தூக்கி வீசப்பட்டார். 40 நிமிடங்களாக கேட்பாரற்று சாலை ஓரத்தில் கிடந்த அவரை காப்பாற்றாமல் அவரது சட்டைப்பையில் பணம்,செல்ஃபோன் உள்ளதா என சிலர் பார்த்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க குடும்பத்தினர் முன்வந்தனர். அதன்படி உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்ட பின் அவரின் உடலுக்கு அரசு சார்பில் தென்காசி ஆர்.டி.ஓ., லாவண்யா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்