போலீஸ் கஸ்டடியிலும் நடிகை பவித்ரா "மேக்-அப்" போட்டது எப்படி? ரசிகனை கொன்ற குற்றவுணர்ச்சியே இன்றி..

Update: 2024-06-27 11:06 GMT

ஜூன் 15 அன்று, பெங்களூரில் குற்றம் நடந்த இடத்தைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்வதற்காக பவித்ரா கவுடா அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, ​​பவித்ரா கவுடா தனது இல்லத்திலிருந்து போலீஸ் அதிகாரிகளுடன் திரும்பி வருகையில் உதட்டுச்சாயம் பூசிக்கொண்டும், மேக்கப் போட்டுக்கொண்டும் சிரித்துக் கொண்டே வந்தார்... தர்ஷனின் ரசிகர் ரேணுகாசுவாமி கொலை வழக்கில் பவித்ரா கவுடா எந்த குற்ற உணர்வும் காட்டாதது பெரும் விவாதத்தைக் கிளப்பியது... இந்நிலையில் பெண் எஸ்.ஐயிடம் இதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது... மறுபுறம், தர்ஷன் வைத்திருந்த 2 அமெரிக்க தயாரிப்பு கைத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்