லக்னோவை சேர்ந்த வழக்கறிஞர் அசோக் பாண்டே, ராகுல் காந்தியின் தகுதி நீக்க அறிவிப்பை நிறுத்தி வைத்த மக்களவை சபாநாயகரின் நடவடிக்கை சரியில்லை என கூறி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மக்களவை செயலகத்தின் அறிவிப்பை நிறுத்தி வைக்கவும் மனுவில் கோரியுள்ளார். எம்.பி அல்லது எம்.எல்.ஏ சிறை தண்டனை பெற்று தகுதி இழக்கும் பட்சத்தில், அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிக்கு உடனே இடைத்தேர்தல் நடத்த வேண்டுமெனவும், அசோக் பாண்டே மனுவில் வலியுறுத்தியுள்ளார்.