சந்தேகத்தில் வாகனத்தை திறந்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த பெரிய அதிர்ச்சி

Update: 2024-10-25 16:27 GMT

மகராஷ்ட்ராவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கே தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சதாரா சாலையில் வாகனங்கள் சோதனையின் போது சந்திக்கிடமான டெம்போ வாகனம் ஒன்றை சோதனையிட்டபோது, அதில் இருந்த பையில் தங்க ஆபரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. ஓட்டுனரிடம் நடத்திய விசாரணையில், அவர் மும்பையில் இருந்து புனே சென்று கொண்டு இருந்ததாக தெரிவித்துள்ளார். கைப்பற்றப்பட்ட ஆபரணங்களில் மதிப்பு சுமார் 138 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இது குறித்து வருமானத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்