திடீரென தடம் புரண்ட மின்சார ரயில்... அலறிய பயணிகள்

Update: 2024-10-19 04:35 GMT

திடீரென தடம் புரண்ட மின்சார ரயில்... அலறிய பயணிகள்


மும்பை அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. கல்யாண் ரயில் நிலையத்தின் இரண்டாவது நடைமேடை அருகே இரவு 9 மணியளவில் மின்சார ரயில் வந்த‌போது, திடீரென ஒரு பெட்டி தடம் புரண்டது. மெதுவாக வந்த‌தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதே நேரத்தில், பல்வேறு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. மும்பையில் இருந்து சென்னைக்கு நள்ளிரவில் புறப்பட இருந்த அதிவிரைவு ரயில், இன்று மாலை 4.45 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதே போன்று பல்வேறு ரயில்களின் அட்டவணை மாற்றப்பட்டன. தொழில்நுட்ப கோளாறால் விபத்து ஏற்பட்டதாகவும், நள்ளிரவு 12.40 ரயில் பெட்டி மீட்கப்பட்டதாகவும் மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்