நாடே காத்திருக்கும் ஒரு தேர்தல் - காங்.கூட்டணியில் பரபரக்கும் தொகுதி பங்கீடு

Update: 2024-10-19 04:19 GMT

நாடே காத்திருக்கும் ஒரு தேர்தல் - காங்.கூட்டணியில் பரபரக்கும் தொகுதி பங்கீடு

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்க சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வலியுறுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவசேனா உத்தவ் அணி, தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் அணி கூட்டணியாக போட்டியிடுகிறது. கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 260 தொகுதிகளில் உடன்பாடி எட்டப்பட்டுவிட்டதாக தெரியவந்தது. மீதமிருக்கும் 28 தொகுதிகளில் இழுபறி நீடிப்பதாக தகவல்கள் வெளியாகின. தேர்தல் நெருங்கும் வேளையில், காலம் கடப்பதாக கூறியிருக்கும் சிவசேனா உத்தவ் அணியை சேர்ந்த சஞ்சய் ராவத், தொகுதி பங்கீடு குறித்து விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்றார். 3 கட்சிகள் இடையேயும் வேறுபாடு இல்லை என்றவர், இருப்பினும் 3 கட்சிகளுமே உரிமை கோரும் சில தொகுதிகள் இருப்பதாகவும் அவை விரைவில் சரி செய்யப்படும் எனவும் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்