ரூ. 20000 கொடுத்து புது பைக் வாங்கி வீட்டுக்கு ரூ.60000 செலவு செய்து கொண்டு வந்த நபர்

Update: 2024-10-14 17:03 GMT

ஷிவ்புரியைச் சேர்ந்த டீக்கடைக்காரர் முராரிலால் குஷ்வாஹா EMIல் வாங்கிய வண்டியை அமைதியாக ஓட்டிக் கொண்டு வந்திருந்தால் பரவாயில்லை... அதை விட்டு விட்டு டிஜே, மேளதாளம், பைக்கைத் தூக்கி வர கிரேன் என தண்ணீராக 60 ஆயிரம் பணத்தை செலவழித்தது தான் வேடிக்கை...இதே நபர் தான் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 12 ஆயிரத்து 500 ரூபாய் கொடுத்து வாங்கிய மொபைல் போனை வீட்டுக்குக் கொண்டுவர 25 ஆயிரம் செலவு செய்தவர்... தனது குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக இதுபோல் வித்தியாசமாக செய்வதாக தெரிவித்துள்ளார்...

ஆனால், அனுமதியின்றி சாலையில் உரக்கப் பாடல்களை ஒலிக்கச் செய்ததாக டிஜே ஆபரேட்டர் மற்றும் முராரிலால் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்