வட மாநில இளைஞர்கள் செய்த பகீர் செயல்..மக்கள் செய்த தரமான சம்பவம் - அதிர்ச்சி சம்பவம்

Update: 2024-10-18 09:34 GMT

வட மாநில இளைஞர்கள் செய்த பகீர் செயல்..மக்கள் செய்த தரமான சம்பவம் - அதிர்ச்சி சம்பவம்

கேரளாவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வட மாநில கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள நெடுங்கண்டம் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தின் ஏடிஎம்மை உடைத்துக் கொள்ளையடிக்க மர்மநபர்கள் முயற்சி செய்துள்ளனர். இது தொடர்பாகத் தகவல் கிடைத்த போலீசார் ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து சோதனை செய்தனர்.அதில் மத்தியப்பிரதேசம் மாநிலம் வடோலா பகுதியைச் சேர்ந்த ராம் துர்வே மற்றும் தருண துர்வே ஆகிய இருவரும் கொள்ளையடிக்க முயன்றது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் இருவரும் அருகே உள்ள இடத்தில் பதுங்கி இருப்பதை அறிந்த பொது மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.அதில் இருவரும் அருகில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக வேலை பார்த்ததும் தெரியவந்துள்ளது. இதந்னை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்