யமுனை ஆற்றில் அதிர்ச்சி.. ஸ்லோ பாய்சனாக மாறுவதால் மக்கள் பீதி

Update: 2024-10-18 09:07 GMT

டெல்லி யமுனையாற்றில் ரசாயன கழிவுகளால்

பொங்கும் நுரையுடன் காட்சியளிக்கிறது. டெல்லியில் ஏற்கனவே காற்று மாசுபாடு காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், கலிந்தி கஞ்ச் பகுதியில், யமுனையாற்றில் ரசாயன கழிவுகளால் நுரை பொங்கி மிதந்து வருகிறது. தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத நீர் ஆற்றில் கலப்பதாகவும், இதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்