பீச்சில் மின்னல் வேகத்தில் கார் ஓட்டினால் என்ன நடக்கும்? தற்செயலாக பதிவான அதிர்ச்சி காட்சி

Update: 2024-10-05 04:15 GMT

கேரளாவில், கடற்கரையில் அதிவேகமாக ஓட்ட முயன்றபோது, சொகுசு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கண்ணூர் மாவட்டத்தில் உள்ள முழப்பிலங்காடு கடற்கரையில் இளைஞர் ஒருவர் சொகுசு வாகனம் ஒன்றை ஓட்டி வந்தார். வேகமாக அலை அடித்துக் கொண்டிருக்கும் மணல் பரப்பில், சாகசம் செய்யும் வகையில் அதிவேகமாக அவர் வாகனத்தை ஓட்டி சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த வாகனம் தலைகீழாக கவிழ்ந்து உருண்டது. எனினும், வாகனத்தை ஓட்டிய இளைஞர் நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினார். கடற்கரையில் சிக்கிய வாகனம், அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்