அரைகுறை ஆடையுடன் ஆடிக்கொண்டிருந்த 42 பெண்கள் - திடீரென உள்ளே வந்த அதிகாரிகள் செய்த சம்பவம்

Update: 2024-10-21 11:13 GMT

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதி செல்வந்தர்கள், தொழிலதிபர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் வசிக்கும் முக்கிய பகுதி ஆகும். இங்கு பல, பப் கிளப்கள் உள்ளன. நேற்றிரவு அங்கு அரைகுறை ஆடையுடன் ஆடிக்கொண்டு இருந்த 42 இளம்பெண்கள் உள்ளிட்ட 142 பேரை போலீஸார் இரவோடு இரவாக கைது செய்துள்ளனர். விசாரணையில், வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி, இளம்பெண்களை இப்படி அரைகுறை ஆடையில் ஆட வைத்து, பப் கிளப் நிர்வாகிகள் பணம் சம்பாதித்தது தெரியவந்தது.

இதில், இளம்பெண்களை ஏமாற்றி மோசடி செய்ததாக 10 பெண்கள் உட்பட 30 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். நள்ளிரவில் போலீஸாரின் இந்த அதிரடி சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்