தொடர்ந்து 3வது முறை.. அரியானாவில் 17ம் தேதி பதவியேற்கிறது பாஜக

Update: 2024-10-12 13:06 GMT
  • அரியானாவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், வரும் 17ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வரும் 15ஆம் தேதி பதவி ஏற்பு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 17ஆம் தேதி பிரதமர் மோடி நேரம் வழங்கியிருப்பதால், அன்றைய தினம் பதவியேற்பு விழா நடைபெறும் என அரியானா முதல்வருக்கான ஊடக செயலாளர் பிரவீன் அட்ரே தெரிவித்துள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறை பாஜகவும், நயாப் சிங் சைனி தொடர்ந்து இரண்டாவது முறை முதல்வராகவும் பதவியேற்க உள்ளதால், பஞ்ச்குலாவில் உள்ள தசரா மைதானத்தில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பாஜக முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்