அரியானா ரிசல்ட்டுக்கு பின் ட்விஸ்ட்.. பாஜகவின் MLA-க்கள் பலம்.. தேதி குறிப்பு | Haryana Election

Update: 2024-10-11 10:05 GMT

அண்மையில் நடைபெற்ற அரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், பா.ஜ.க. 48 இடங்களில் வெற்றி பெற்று, தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. சாவித்ரி ஜிண்டால் உட்பட சுயேட்சை எம்.எல்.ஏக்கள் மூவர் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளதால், பா.ஜ.கவின் பலம் 51-ஆக உள்ளது. இதனைத்தொடர்ந்து ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளில் பா.ஜ.க. இறங்கியுள்ள நிலையில், பதவியேற்பு விழா வரும் 15-ம் தேதி பஞ்ச்குலாவில் உள்ள பரேட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. விழாவை ஒருங்கிணைக்க ஹரியானா தலைமைச் செயலாளர், 10 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். முதலமைச்சராக நயாப் சிங் சைனியே மீண்டும் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஓரிரு நாட்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில், சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்