பெற்ற மகனை பெட்ரோல் ஊற்றி எரித்த தந்தை : அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியீடு

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், பெற்ற மகனை, தந்தை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-04-08 03:44 GMT
பெங்களூரு சாம்ராஜ்பேட் பகுதியைச் சேர்ந்த சுரேந்திரா, ரெடிமேட் ஆடைகள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் அர்ப்பித்தும், தந்தைக்கு உதவியாக வியாபாரத்தை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், வியாபாரத்தில், ஒன்றரை கோடி ரூபாய் அளவுக்கான கணக்கு வழக்குகளை அர்ப்பித் சரியாக காட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால் தந்தை மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த, சுரேந்திரா, மகன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். பலத்த தீக்காயமடைந்த அர்ப்பித், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தந்தை, மகனை  தீ வைத்து எரித்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியிருந்தன. 

Tags:    

மேலும் செய்திகள்