தென்னிந்தியாவையே அதிரவைத்த என்கவுன்ட்டரில் திடீர் திருப்பம்... நாமக்கல் விரைந்த ஆந்திர போலீஸ்

Update: 2024-09-28 05:08 GMT

நாமக்கல் மாவட்டம், வெப்படை அருகே ஏடிஎம் கொள்ளைச் சம்பவத்தில் என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தை குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மாலதி சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினார். கேரள மாநிலம், திருச்சூரில் நிகழ்ந்த ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் தப்பிக்க முயன்ற 7 பேர் கொண்ட வடமாநில கும்பலை பிடிக்க முயன்றபோது, ஹரியானாவை சேர்ந்த ஜமாலுதீன் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார். தப்பியோட முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தை நீதிபதி மாலதி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். சம்பவ இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சூட்கேசில் 67 லட்ச ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்