ராணுவ வீரர் சடலத்துடன் சாலை மறியல் - கலவர பூமியாக மாறிய ஊர்
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே சிக்கிம்மில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்று கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சடலத்துடன் சாலைமறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கட்டுப்படுத்த முயன்றனர். அப்போது காவல்துறையினர் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து கண்ணீர் புகை குண்டுகள் வீசிய போலீசார், கலவரத்தை கட்டுப்படுத்தினர்.