பகத்சிங் சொந்த கிராமத்தில் பஞ்சாப் முதல்வர் பதவியேற்பு விழா!

பஞ்சாபில் ஆட்சி அமைப்பது தொடர்பாக அம்மாநில ஆளுநரை நாளை சந்திக்க இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற பக்வந்த் மன் கூறியுள்ளார்.

Update: 2022-03-11 08:29 GMT
பஞ்சாபில் ஆட்சி அமைப்பது தொடர்பாக அம்மாநில ஆளுநரை நாளை சந்திக்க இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற பக்வந்த் மன் கூறியுள்ளார். பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று உள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலை சந்தித்துப் பேசுவதற்காக பகவந்த் மன் இன்று டெல்லி புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், பதவியேற்பு நடைபெறும் நாள் குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும் என்றும், நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர இருப்பதாகவும் கூறினார். சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் சொந்த கிராமமான கத்ஹர் கலனில் பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்