"அரசு பேருந்துகளில் சத்தமாக பேசவும், செல்போனில் சத்தமாக பாட்டு கேட்கவும் தடை"

கேரளாவில் அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் செல்போனில் சத்தமாக பேசவும், பாட்டு கேட்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-02-20 14:00 GMT
கேரளாவில் அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் செல்போனில் சத்தமாக பேசவும், பாட்டு கேட்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அரசு பேருந்துகளில் செல்லும் பயணிகள் செல்போனில் சத்தமாக பேசுவதால் இடையூறு ஏற்படுவதாக கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு புகார்கள் வந்தன. அதன்மீது நடவடிக்கை எடுத்த போக்குவரத்து கழகம் அரசு பேருந்துகளில் செல்வோர் செல்போனில் சத்தமாக பேசவோ, பாட்டு கேட்கவோ கூடாது என்றும், உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பை பேருந்துகளில் ஒட்ட வேண்டும் என ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்