முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு

சவுதி அரேபியா மன்னரின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.

Update: 2019-10-29 19:05 GMT
சவுதி அரேபியா மன்னரின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக சவுதி அரேபியா சென்றுள்ளார். ரியாத் நகரில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, நம்பிக்கையின் மையமாக சவுதி உள்ளதாக குறிப்பிட்டார். நாட்டின் வளர்ச்சிக்கு, உள்கட்டமைப்பு மிகவும் முக்கியமானது என அவர் கூறினார். தற்போது இந்தியாவின் உள்கட்டமைப்பு இரட்டை இலக்கமாக அதிகரித்துள்ளது. மேலும் உள்கட்டமைப்புக்கென இந்தியா 1.5 டிரில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்