RDX படத்தின் தயாரிப்பாளர் மீது பரபரப்பு புகார்

Update: 2024-07-04 08:47 GMT

ஆர்.டி.எக்ஸ் படத்தின் தயாரிப்பாளர்கள் சோபியா பால் மற்றும் ஜேம்ஸ் பால் ஆகியோர் மீது திரிபுனித்துறையைச் சேர்ந்த அஞ்சனா ஆபிரகாம் என்பவர் ஹில் பேலஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். 'ஆர்டிஎக்ஸ்' படம் தயாரிப்பில் தான் 6 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும், லாப வீகிதத்தில் 30 சதவீதம் தருவதாக கூறியிருந்த நிலையில், தாம் ஏமாற்றப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஏற்கனவே மஞ்சும்மால் பாய்ஸ் படத் தயாரிப்பில் நிதி மோசடி செய்த புகாரின் பேரில் ஷான் ஆண்டனி, சௌபின் ஷாஹிர் மற்றும் பாபு ஷாஹிர் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தயாரிப்பாளர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் நடந்து வரும் நிலையில் அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்