பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா இந்திய தேசியக்கொடியை ஏந்திச் செல்லவுள்ள மனு பாக்கர்

Update: 2024-08-04 11:14 GMT

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில், இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் 2 வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள மனுபாக்கர், நட்சத்திர வீராங்கனையாக உருவெடுத்துள்ளார். இந்நிலையில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி நடைபெறும் ஒலிம்பிக் நிறைவு விழாவில், இந்தியாவின் தேசியக்கொடியை மகளிர் சார்பாக மனுபாக்கர் கையில் ஏந்திச் செல்லவுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் ஆடவர் சார்பில் தேசியக்கொடியை ஏந்தும் வீரர் குறித்த தகவல் வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்