"உலகமே பாராட்டுகிறது" இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி புகழாரம்

Update: 2024-08-16 13:09 GMT

பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி உரையாற்றிய காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய வீரர்களை உலகமே பாராட்டுகிறது என நெகிழ்ந்த பிரதமர் மோடி, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நமது வீரர்களில் பெரும்பாலும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள், இது நமது வீரர்களின் இளமை துடிப்புக்கு ஒரு சான்று, வீரர்கள் அனைவரும் சிறப்பான திறமையை வெளிப்படுத்தினர் என்றார். உத்வேகத்தை இழக்காமல் தொடர்ந்து விளையாடுங்கள் என அறிவுறுத்திய பிரதமர் மோடி, உங்கள் வெற்றி இந்தியாவின் பிரகாசமான விளையாட்டு எதிர்காலத்திற்கு ஒரு ஒளிரும் எடுத்துக்காட்டு என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்