வாழை பார்த்துவிட்டு ஷங்கர் சொன்ன நெஞ்சில் ஈட்டியை இறக்கும் வார்த்தைகள்

Update: 2024-08-26 06:33 GMT

வாழை திரைப்படத்தின் தாக்கம் தன்னை விட்டு நீங்காமல் இருப்பதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான வாழை திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் குறித்து இயக்குநர் ஷங்கர் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். அதன்படி, வாழை திரைப்படத்தில் யதார்த்தம், அழகியல், உணர்வுகள் என அனைத்தும் சிறப்பாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். குறிப்பாக இப்படம் தன்னுள் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக, இனி வாழைப்பழம் முன்பு போல் தித்திக்குமா எனத் தெரியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்