திடீர் திடீரென மாறும் வானிலை.. 2 மணி நேரம் விட்டு வெளுத்து வாங்கிய மழை | TN Rainfall

Update: 2024-08-09 03:57 GMT

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்தது. காற்றுடன் பெய்த மழையால், குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

ஈரோடு நகர் மற்றும் வீரப்பன்சத்திரம், சோலார், அக்ரஹாரம், கருங்கல்பாளையம், பழைய பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இடைவிடாமல் கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கனமழை வெளுத்து வாங்கியது. விடாது பெய்த மழையால், மானாமதுரை ரயில் நிலையத்தில் மேற்கூறையில் இருந்து ஆங்காங்கே தண்ணீர் ஒழுகியது. இதனால், பயணிகள் நிற்க கூட முடியாமல் அவதியடைந்தனர்.

செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான வல்லம், ஆலப்பாக்கம், மேலமையூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்