மக்கள் கவனத்திற்கு... ``அனைத்து ரேஷன் கடைகளிலும்..'' - வெளியான அதிமுக்கிய அறிவிப்பு

Update: 2024-10-24 12:40 GMT

நியாய விலைக்கடைகள் மூலம் மத்திய கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்களுக்கு சேமிப்பு கணக்கு தொடங்குவது குறித்து அனைத்து மண்டல பதிவாளர்களுக்கு கூட்டுத்துறவுத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

கூட்டுறவு சங்கங்களில் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் புதிய வங்கியியல் திட்டங்களை செயல்படுத்த கூட்டுறவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், நியாய விலைக்கடைகள் மூலம் கூட்டுறவு வங்கிகளின் சேமிப்பு மற்றும் கடன் சேவைகள் பொதுமக்களை சென்றடையும் வகையில், சேமிப்பு கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதன்படி, அனைத்து நியாய விலைக்கடைகளிலும் கூட்டுறவு வங்கிகளின் சேமிப்புத் திட்டங்கள், கடன் திட்டங்கள் குறித்தான கையேடுகளை விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான விண்ணப்பங்களை நியாய விலைக்கடை ஊழியர்களை கொண்டு பூர்த்தி செய்ய வேண்டுமெனவும், பணிபுரியும் ஊழியர்களுக்கு கணக்கு ஒன்றுக்கு ஊக்கத் தொகையாக 5 ரூபாய் வழங்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்