புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே ராஜராஜ சோழன் நிறுவிய சிவன் கோயிலை கண்டறிந்துள்ளதாக தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் முனைவர் காளிதாஸ் தெரிவித்துள்ளார். ஆவுடையார்கோவில் அருகே உள்ள கார்க்கமலம் கிராமத்தில், தாம் கள ஆய்வு செய்தபோது இதனை கண்டுபிடித்தாக அவர் கூறுகிறார். மேலும் கல்வெட்டில் இந்த கார்க்கமலம் பெருவுடையார் கோயில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.