1008 பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பெண்கள்
பழனி மாரியம்மன் கோவிலுக்கு 1008 பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்லமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று மாரியம்மன் கோவிலை அடைந்தனர். தொடர்ந்து, கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள் சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.