பெண் சாவில் மர்மம் என புகார்- உறவினர்கள் போராட்டம்

x

சேலம் அருகே மகளின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி, பெண் வீட்டார் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இ.காட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவரின் மனைவி சுந்தரி, குடும்ப பிரச்னை காரணமாக கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து அவருடைய உடல் வைக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனை முன், அவருடைய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில், சுந்தரியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சுந்தரியின் கணவர் மற்றும் மாமியாரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்