பெண் த*கொலை முயற்சி... கணவர், உறவினர்கள் மீது தாக்குதல்

Update: 2024-09-16 13:28 GMT

கள்ளக்குறிச்சியில் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில், ஆம்புலன்சில் சென்ற கணவர் மற்றும் உறவினர்களை பெண்ணின் உறவினர்கள் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. தியாகதுருகம் அருகே குடியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வெங்கடேசனுடன் குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த அவரது மனைவி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர், மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். தகவலறிந்த பெண்ணின் உறவினர்கள், வெங்கடேசன் மற்றும் அவரது குடும்பத்தினரை, மருத்துவமனை வளாகத்திலேயே தாக்கினர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்