"என் பைக்கை இப்போ பார்க்கணும்"... "முடியவே முடியாது.." மறுத்த போலீசார் - புலம்பி தள்ளிய TTF வாசன்

Update: 2023-11-12 10:48 GMT

காஞ்சிபுரம் அருகே, விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட டிடிஎஃப் வாசன் ஜாமினில் வெளியே வந்தார். இந்த நிலையில், காஞ்சிபுரம் அடுத்த பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட டிடிஎஃப் வாசன், விபத்தில் சிக்கிய தனது இருசக்கர வாகனத்தை பார்க்க ஆசைப்பட்டு, போலீசாரிடம் அனுமதி கேட்டார். அதற்கு போலீசார் அனுமதி இல்லை எனக் கூறியதால், மன வருத்தத்துடன் வெளியே வந்த டிடிஎஃப் வாசன், இருசக்கர வாகனத்திற்கும் பெயில் போடலாமா? என புலம்பிக்கொண்டே சென்றார். அப்போது அங்கு அவரை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள், செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்