சென்னையில் தச்சு தொழிலாளர்களுக்கு பரிசு

Update: 2024-10-24 05:06 GMT

சென்னையில் தச்சு தொழிலாளர்களுக்கு பரிசு 

சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் பாலாஜி ஆக்சன் பில்ட்டு வெல் நிறுவனம் சார்பாக தச்சு தொழிலாளர் தினத்தை தேசா சலாம் தினமாக கொண்டாடப்பட்டது. ஆக்சன் தேசா நிறுவன துணை தலைவர் அவ்தேஷ் ஜெயின், துணை பொது மேலாளர் ஜெனார்த்தனம் ரெட்டி, மண்டல மேலாளர் குமார் ஆகியோர் ஆக்சன் தேசா சார்பில், அதிக ஆயுளுடன் தண்ணீரால் பாதிக்காத மரப்பலகைகள், பிளைவுட்டுகள் குறித்து எடுத்துரைத்தனர். தொடர்ந்து தச்சு தொழிலாளர்களுக்காக புதிய தேசா செயலியை அறிமுகம் செய்தனர். பின்னர் தச்சு தொழிலாளர்களுக்கு பரிசுகளை ஆக்சன் தேசா நிறுவன துணை தலைவர் அவ்தேஷ் ஜெயின் வழங்கினார். தொடர்ந்து தொழிலாளர்களுக்கு அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்