நீலகிரியை புரட்டி போட்ட பேய் மழை... இயற்கையின் ருத்ர தாண்டவம் இதுதானோ

Update: 2024-07-02 03:34 GMT

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, மண் வயல், ஸ்ரீ மதுரை, தேவர் சோலை, செரு முள்ளி பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்த‌து. இதனால், முதுமலை வனப்பகுதி வழியாக செல்லும் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தரைப்பாலத்தில் அடைப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பின்னர், ஜேசிபி இயந்திரம் மூலம் அடைப்புகள் நீக்கப்பட்டு, போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. 5க்கும் மேற்பட்ட இடங்களில் மின்கம்பங்களில் மரங்கள் விழுந்த‌தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மரங்களை வெட்டி அகற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்